ஜெயஸ்ரீ ஷங்கர்

Tuesday, June 21, 2016

மூன்றெழுத்தில் நம் வாழ்விருக்கும் ...!


மிகக் கடினமானவை மூன்றுண்டு:


1. இரகசியத்தை காப்பது.2. இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது.3. ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன்படுத்துவது.


நன்றி காட்டுவது மூன்று வகையிலாகும்:
1. இதயத்தால் உணர்தல்.2. சொற்களால் தெரிவித்தல்.3. பதிலுக்கு உதவி செய்தல்.


மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை மூன்றுண்டு:
1. சென்றதை மறப்பது.2. நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது.3. வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது.


இழப்பு மூன்று வகையிலுண்டு:
1. சமையல் அமையாவிட்டால் ஒருநாள் இழப்பு.2. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு.3. திருமணம் பொருந்தாவிட்டால் வாழ்நாள் முழுவதும் இழப்பு.


உயர்ந்த மனிதனின் வாழ்வு மூன்று வகையில் இருக்கும்:
1. அவன் ஒழுக்கத்தோடிருப்பதால் கவலையற்றிருப்பான்.2. அவன் அறிவாளியாயிருப்பதால் குழப்பங்களற்றிருப்பான்.3. அவன் துணிவாக இருப்பதால் அச்சமின்றியிருப்பான்.


No comments:

Post a Comment